சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
743 - கோல மறை (திருநாவலூர்) 957 - ஆனைமுகவற்கு (மதுரை) 1024 - ஏடுமலர் உற்ற (பொதுப்பாடல்கள்) 1025 - சீதமலம் வெப்பு (பொதுப்பாடல்கள்) 1026 - தோடு பொரு மை (பொதுப்பாடல்கள்) 1027 - தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்) 1319 - வார்குழையை (பழமுதிர்ச்சோலை) Songs from this thalam திருநாவலூர் 1322 - மலரணை ததும்ப
743 திருநாவலூர் திருப்புகழ் ( - வாரியார் # 753 )
கோல மறை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
கோரமதன் விட்ட ...... கணையாலே
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
கோகிலமி குத்த ...... குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
ஆரழலி றைக்கு ...... நிலவாலே
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
மாசைகொட ணைக்க ...... வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
நாரணனு மெச்சு ...... மருகோனே
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
நாகமற விட்ட ...... மயில்வீரா
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
சீரணி தனத்தி ...... லணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.
Easy Version:
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற கோரமதன் விட்ட
கணையாலே
கோதில தருக்கள் மேவு பொழிலுற்ற கோகில மிகுத்த
குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழல் இறைக்கு
நிலவாலே
ஆவி தளர்வுற்று வாடுமெனை நித்தம் ஆசைகொடு அணைக்க
வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனு மெச்சு
மருகோனே
நாவலர் மதிக்க வேல்தனை யெடுத்து நாகமற விட்ட
மயில்வீரா
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி தனத்தில்
அணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற தேவர்சிறை விட்ட
பெருமாளே. Add (additional) Audio/Video Link
கணையாலே ... அழகியவனும், அனங்கனாக உருவத்தை மறைத்து
வைத்திருப்பவனும், மாலைப் பொழுதில் வந்து சேர்ந்துள்ளவனும்,
கொடியவனும் ஆன மன்மதன் செலுத்தும் புஷ்ப பாணங்களினாலும்,
கோதில தருக்கள் மேவு பொழிலுற்ற கோகில மிகுத்த
குரலாலே ... குற்றமற்ற நல்ல செழிப்பான மரங்கள் நிறைந்த
சோலையில் உள்ள குயிலின் பலமான ஓசையினாலும்,
ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழல் இறைக்கு
நிலவாலே ... விஷக் கதிர்களை எறிந்து வீசும் ஒளி மூலமாக மிகுத்த
நெருப்பை எங்கும் அள்ளி இறைக்கும் நிலவினாலும்,
ஆவி தளர்வுற்று வாடுமெனை நித்தம் ஆசைகொடு அணைக்க
வரவேணும் ... ஆவியானது தளர்ச்சியுற்று வாடுகின்ற என்னை
நாள்தோறும் ஆசையுடனே அணைக்க நீ வரவேண்டும்.
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனு மெச்சு
மருகோனே ... நான்கு வேதங்களையும் கற்ற பிரமனைத் தோற்றுவித்த
நாரணனாகிய திருமால் மெச்சிடும் மருகனே,
நாவலர் மதிக்க வேல்தனை யெடுத்து நாகமற விட்ட
மயில்வீரா ... புலவர்கள் மதிக்கும்படியாக வேலாயுதத்தை எடுத்து
கிரெளஞ்ச மலையைப் பொடிபடச் செலுத்திய மயில் வீரனே,
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி தனத்தில்
அணைவோனே ... சேல் மீன் போன்ற கண்ணை உடைய வேடுவப்
பெண் வள்ளியின் சீரும் அழகும் கொண்ட மார்பை அணைவோனே,
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற தேவர்சிறை விட்ட
பெருமாளே. ... குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துள்ள திருநாவலூரில்
வீற்றிருக்கும், தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே.
1
Similar songs:
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வாழ்வோடு சிறக்க அருள்வாயே
வளமுடன் வாழ அருள்வாயே
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song